Connect with us

Raj News Tamil

இன்ஸ்டாவில் லவ் செய்து 3வதாக வாக்கப்பட்ட இளைஞர்..!

இந்தியா

இன்ஸ்டாவில் லவ் செய்து 3வதாக வாக்கப்பட்ட இளைஞர்..!

கர்நாடகாவை சேர்ந்த பிரசாந்த் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு சினேகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி சினேகா பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சினேகா வேறொருவரை திருமணம் செய்த புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரசாந்த், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பிரசாந்த் கூறுகையில்,”எனக்கு முன் இரண்டு ஆண்களை மணந்ததால் என் மனைவிக்கு நான் மூன்றாவது கணவன். தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். நான் அவளை திருமணம் செய்யும் போது அவள் குடும்பத்தில் இருந்து யாரும் என்னிடம் அவள் முந்தைய திருமணங்களைப் பற்றி கூறவில்லை. எதிர்காலத்தில் மற்ற ஆண்களை ஏமாற்றாமல் இருக்க சினேகா மீது மோசடி புகார் கூறியுள்ளேன் ”என்றார்.

இந்த நிலையில், பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in இந்தியா

To Top