Connect with us

Raj News Tamil

“தீக்குளிப்போம்.. எங்களுக்கு பணி இல்லையா” – தர்ணாவில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர்!

தமிழகம்

“தீக்குளிப்போம்.. எங்களுக்கு பணி இல்லையா” – தர்ணாவில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர்!

அரசு போக்குவரத்து பணிமனை வளாகத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு, பேருந்துகள் ஒதுக்கும் பணி நடந்து வந்தது.

அப்போது, ஓட்டுநர் தேவராஜ்-ம், நடத்துனர் பாபுவும், வழக்கம்போல் பணிக்கு வந்தனர். ஆனால், அவர்களுக்கு இன்று பணி கிடையாது என்று காசாளர் காமேஷ் கூறியுள்ளார்.

இதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு, கிளை மேலாளரின் ஆணையை தான் நிறைவேற்றியுள்ளேன் என்று காசாளர் காமேஷ் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இரண்டு பேரும், பணிமனை வளாகத்தில், தீக்குளிக்க போவதாக கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போல், இன்னும் 5 பேருக்கு பணி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top