Connect with us

Raj News Tamil

பொங்கல் தொகுப்பை பெற இன்றே கடைசி நாள்!

தமிழகம்

பொங்கல் தொகுப்பை பெற இன்றே கடைசி நாள்!

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூபாய்.1,000 ரொக்க பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்கள் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டையை காண்பித்து டோக்கன்களை பெற்றுக்கொண்டனர். பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் கடையின் பெயர், டோக்கன் எண், பொருட்களை வாங்க வர வேண்டிய தேதி ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

டோக்கன் வழங்கும் பணி கடந்த 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் 10 ஆம் தேதி முதல் ( 13 ஆம் தேதி) இன்று வரை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் ரூ.1,000 ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடைசி நாளான இன்று நியாயவிலை கடையில் பொங்கல் தொகுப்பை பெறாதவர்கள் பெற்றுக் சென்றனர்.

More in தமிழகம்

To Top