Connect with us

Raj News Tamil

உணவு டெலிவரி செய்த இளைஞர் படுகொலை.. துண்டு துண்டாக வெட்டிய வாடிக்கையாளர்.. காரணம் என்ன?

உலகம்

உணவு டெலிவரி செய்த இளைஞர் படுகொலை.. துண்டு துண்டாக வெட்டிய வாடிக்கையாளர்.. காரணம் என்ன?

அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ரண்டால். இவர், யுபேர் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி அன்று, வழக்கம் போல் உணவு டெலிவரி செய்வதற்கு அவர் சென்றுள்ளார்.

பணி முடிந்து நீண்ட நேரமாகியும், அவர் வீடு திரும்பாததால், ரண்டாலின் மனைவி, காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், உணவு டெலிவரி செய்ய சென்றபோது, வாடிக்கையாளர் ஒருவர் தான், ரண்டாலை கொலை செய்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது.

மேலும், ரண்டாலின் உடலை துண்டு துண்டாக வெட்டி, குப்பைத் தொட்டியில் வீசியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வாடிக்கையாளரை கைது செய்த காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top