சினிமா
மறைந்தார் வைகைப்புயலின் சகோதரர்!வருத்தம் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்!
தென்னிந்திய திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவருக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இவரது இரண்டாவது சகோதரர் ஜெகதீஸ்வரன் (வயது 52). ஜவுளி வியாபாரம் பார்த்து வருகிறார். காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளில் நடித்தா இவர் கடந்த சில மாதங்களாக பல்வேறு நோய் பிரச்சனைகளுக்கு அவதிக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் நோயின் பிடியில் இருந்து விடு பட முடியாத அவர் தொடர்ந்து ஜவுளி வியாபாரத்தையும் கவனிக்க முடியாமல் வீட்டில் முடங்கினார்.
இதற்கிடையே மதுரையில் விரகனூரை அடுத்த ஐராவதநல்லூரில் உள்ள மந்தையம்மன் கோவில் பின்புறமுள்ள ஒரு குடிசை வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் இன்று காலை காலமானார். இதுபற்றிய தகவல் நடிகர் வடிவேலுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காலமான ஜெகதீஸ்வரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் மறைந்த ஜெகதீஸ்வரன் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்று தகவல் வெளிவந்துள்ளது