Connect with us

Raj News Tamil

கதவில் சிக்கிய சேலை…..பெண்ணின் உயிரை பறித்த மெட்ரோ ரயில்

இந்தியா

கதவில் சிக்கிய சேலை…..பெண்ணின் உயிரை பறித்த மெட்ரோ ரயில்

மேற்கு டெல்லியில் உள்ள நாங்லோய் பகுதியை சேர்ந்தவர் ரீனா. இவருக்கு 13 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர். இவர் கடந்த 14ம் தேதி ரீனா தனது மகனுடன் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்ய சென்றார்.

ன்டர்லாக் ஸ்டேஷனில் அவர் மெட்ரோ ரயிலில் ஏற முயன்ற போது ரயிலின் கதவில் சேலை சிக்கியதால் அவர் நடைமேடையில் விழுந்த நிலையில் இழுத்து செல்லப்பபட்டார்.

இதனை பார்த்த அவரது மகன் மற்றும் பயணிகள் அலறினர். மெட்ரோ ரயிலை நிறுத்தும்படி கூறினர். ஆனால் மெட்ரோ ரயில் நிற்கவில்லை. இதனால் சுமார் 25 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட ரீனா மெட்ரோ ரயிலின் அடியில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதையடுத்து அவர் மீட்கப்பட்டு சப்தர்சுங்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ரீனாவின் கணவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தற்போது இவரும் உயிரிழந்துள்ளார்.

More in இந்தியா

To Top