Connect with us

Raj News Tamil

பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பெண்.. துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 2 பேர்..

இந்தியா

பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பெண்.. துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 2 பேர்..

தலைநகர் டெல்லியில் உள்ள பஸ்கிம் விஹார் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. 32 வயதான இவர், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று, தனது பணியை முடித்துவிட்டு, 7.30 மணிக்கு வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

அப்போது, அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 பேர், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் கொலை தொடர்பாக பேசும்போது, கொலை செய்ய வந்த 2 பேரும் தனித்தனி வாகனத்தில் வந்தனர். ஒருவர் பைக்கிலும், மற்றொருவர் ஸ்கூட்டரில் வந்தனர். பின்னர், துப்பாக்கியால் என் மனைவியை கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top