Connect with us
Raj News Tamil

Raj News Tamil

மகளிர் உரிமைத்தொகை: கூடுதலாக 7.35 லட்சம் பேருக்கு முதல்வர் வழங்கினர்!

தமிழகம்

மகளிர் உரிமைத்தொகை: கூடுதலாக 7.35 லட்சம் பேருக்கு முதல்வர் வழங்கினர்!

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 2-ஆம் கட்டத்தை இன்று (நவ.10) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று காலை சென்னை கலைவாணர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 2-ஆம் கட்டத்தை 7.35 லட்சம் பயனாளிகள் சிலருக்கு உரிமைத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300-ஆக உயர்ந்துள்ளது.

More in தமிழகம்

To Top