தமிழகம்
திருமணமாகி ஒரே மாதம் தான்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. கசந்துப் போன காதல்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனு பிரியா. 26 வயதாகும் இவர், வங்கியில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். இதன்காரணமாக, சென்னையில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து, அதற்காக தயாராகி வந்தார்.
அப்போது, திருமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக் கொண்டனர். மேலும், ஆம்பூரிலேயே தனியாக வீடு எடுத்து தங்கி வந்தனர்.
திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குடும்ப தகராறு காரணமாக, மன உளைச்சலில் இருந்த அனுப் பிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண், தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login