இந்தியா
“நம்ம வீடியோவை உன் பொண்டாட்டிக்கு அனுப்பிடுவேன்” – மிரட்டிய காதலி! தற்கொலை செய்த இளைஞர்!
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ராயதுர்கம் நகரை சேர்ந்தவர் பிருத்வி. உணவு கடை நடத்தி இவருக்கு, லலிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், பிருத்விக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே, கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை வீடியோவாகவும், அந்த பெண் பதிவு செய்து வந்துள்ளார். இதற்கிடையே, திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காதலியிடம் பேசுவதை, பிருத்வி தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், வீடியோ பதிவுகளை காட்டி மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கு பணியாத அவர், காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, தனக்கு பிருத்வி தொல்லை தருவதாக அந்த பெண்ணும் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த இரண்டு புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்கு, காவல்துறையினர் அழைத்துள்ளனர். அதற்கு முந்தைய நாள், பிருத்விக்கு செல்போனில் அழைப்பு விடுத்த காதலி, தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும், அதற்கு மறுப்பு சொன்னால், வீடியோவை உன் மனைவிக்கு அனுப்பி விடுவேன் என்றும், மிரட்டியுள்ளார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், தன் மனைவியிடம் நடந்த அனைத்தையும் கூறிவிட்டு, தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login