தமிழகம்
மகளை தென்னந்தோப்புக்கு அழைத்து சென்ற தந்தை.. கர்ப்பமான சிறுமி.. காவல்துறை அதிர்ச்சி..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாலு. 43 வயதாகும் இவர், தென்னந்தோப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். மனைவி உயிரிழந்த நிலையில், இவருடைய மகள்கள் இரண்டு பேரும், தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சமையல் உதவிக்கு ஆள் வேண்டும் என்று கூறிய பாலு, தனது மகளை தென்னந்தோப்பிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, கடந்த 3 மாதங்களாக, தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதில், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இந்த தகவல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்றதையடுத்து, அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ், பாலுவை கைது செய்தனர். பெற்ற மகளுக்கு, தந்தையே பாலியல் வன்கொடுமை அளித்து, கர்ப்பமாக்கியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login