Connect with us

Raj News Tamil

குளத்திற்குள் பஸ் கவிழ்ந்து விபத்து – 17 பேர் பலி

உலகம்

குளத்திற்குள் பஸ் கவிழ்ந்து விபத்து – 17 பேர் பலி

வங்காளதேச நாட்டின் பரிஸ்ஹல் மாகாணதின் பண்டாரியா நகரில் இருந்து 60 பயணிகளுடன் பரிஸ்ஹல் நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஜலாக்தி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே இருந்த குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்த அனைவரும் குளத்திற்குள் மூழ்கினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் பயணிகள் 17 பேர் உயிரிழந்தனர். வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் ஆறு, குளங்களில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in உலகம்

To Top