இந்தியா
“நீ செத்தா தான் என் ஆசை நிறைவேறும்” – தாயை கொன்ற 17 வயது இளம்பெண்!
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற பகுதியை சேர்ந்தவர் மம்தா குஷ்வாஹா. இவர், தனது 17 வயது மகளுடன், வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த இளம்பெண், தனது ஆண் நண்பரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் மம்தாவிற்கு பிடிக்காததால், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அந்த பெண் மைனராக இருப்பதால், காதலனை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்துள்ளனர். பின்னர், ஜாமினில் வெளியே வந்த அந்த நபர், தனது காதலியை தொடர்பு கொண்டு, மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு தாய் இடைஞ்சலாக இருந்ததால், அவரை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தாயை பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login