Connect with us

உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை..!

உலகம்

உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை..!

பறவைகள், விலங்குகள், காய்கறிகள் என 120 பொருட்களை அடையாளம் காண்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் பிறந்து 4 மாதமே ஆன பெண் குழந்தை ஒருவர்.

ஆந்திர மாநிலம் நந்திகாமா நகரை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாத பெண் குழந்தை, தனது மிகச்சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள்,பறவைகள், என 120 பொருட்களை அடையாளம் காணுகிறார்.

தனது நான்கு மாதப் பெண் குழந்தைக்கு இவ்விதமான சிறப்பு திறமை இருப்பதை அறிந்த அந்தக் குழந்தையின் தாய் ஹேமா, அதனை வீடியோவாக பதிவு செய்து நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த Noble World Records குழுவினர், அக்குழந்தை உலக சாதனைக்கு தகுதியானவர் என்று அங்கீகரித்து குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளனர்.

More in உலகம்

To Top