Connect with us

Raj News Tamil

புதுச்சேரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்தியா

புதுச்சேரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

புதுச்சேரியில் நேற்று பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அளித்த பேட்டியில் : புதுச்சேரியில் கடந்த நவம்பர் 27 ம் தேதி கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக இருந்தது. சீனாவில் நோய் தொற்று அதிகரிப்பதால் மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் முக கவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாய் எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒன்று, இரண்டு என பாதிப்பு இருந்தது. நேற்று 680 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுச்சேரி-2, காரைக்கால்-2, ஏனாம்-1 என 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

இது வரை மொத்தமாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் வீடுகளில் 20 பேரும் ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது வரை உருமாறிய கொரோனா பாதிப்பு புதுச்சேரியில் இல்லை என்றும் போதிய தடுப்பூசி உள்ளதால் விடுப்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும் சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top