தமிழகம்
பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 7-ஆம் வகுப்பு மாணவன் பேருந்து மோதி பலி!
சேலம் அருகே, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த 7-ஆம் வகுப்பு மாணவன், அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தான்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கவேஷ், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், இன்று பள்ளி முடிந்து, மாணவன் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், படுகாயம் அடைந்த மாணவன் கவேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் கிடந்த மாணவனின் உடலை பார்த்து, அவனது உறவினர்களும், பெற்றோர்களும் கதறி அழுத சம்பவம், அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.
இதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் பகுதியை சேர்ந்த 10 பேர், ஷேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பேர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த 4 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login