Connect with us

Raj News Tamil

அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்தது..!

இந்தியா

அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்தது..!

புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 16 வது குறுக்கு தெருவில் உள்ளது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, இங்கு 10 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த புத்தாண்டு இரவு அன்று அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் இருந்து புகை கிளம்பிதை கண்டு அங்கு சென்று பார்த்த குடியிருப்பு வாசி ஒருவர் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த வாகனங்களில் பற்றி எறிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர், இதனால் அங்கு பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் 8 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்தது.

இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு செயலாளர் மணிகண்டன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நேற்று மாலை வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீயிட்டு கொளுத்தி உள்ளார்களா? அல்லது இருசக்கர வாகனத்தில் ஏதேனும் வையர்களில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top