Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

ஒரு வயது குழந்தைக்கு மாரடைப்பு.. உடைந்த விலா எலும்பு.. தாயின் காதலன் செய்த வெறிச்செயல்..

உலகம்

ஒரு வயது குழந்தைக்கு மாரடைப்பு.. உடைந்த விலா எலும்பு.. தாயின் காதலன் செய்த வெறிச்செயல்..

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ பகுதியை சேர்ந்தவர் எட்வர்டு முர்ரே. 23 வயதாகும் இவர், அமினடா என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களாக டேட்டிங் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், அமினடாவின் ஒரு வயது குழந்தை, கடந்த 5-ஆம் தேதி அன்று, உயிரிழந்ததாக, மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், “கரீம் மீது மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மூளையில் வீக்கமும், கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளது. விலா எலும்பு உடைந்துள்ளது. இறுதியில், அந்த பச்சிளங் குழந்தை உயிரிழந்துவிட்டது” என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், எட்வர்டு-ஐ கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு தற்போது, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top