Connect with us

Raj News Tamil

பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10ம் வகுப்பு மாணவன்

இந்தியா

பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 10ம் வகுப்பு மாணவன்

ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி-பிஹ்ரோர் மாவட்டம் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சச்சின் என்ற மாணவன் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் படிக்கும் பள்ளியில் விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் சச்சினை ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்துவந்தனர். மேலும் தேர்வில் தோல்வியடையவைத்து வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.

இதனால், மன உளைச்சல் அடைந்த மாணவன் சச்சின் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மாணவனுக்கு ஜாதிய ரீதியில் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

More in இந்தியா

To Top