Connect with us

Raj News Tamil

ராஜஸ்தான் இடைத்தேர்தல் : பாஜக அமைச்சர் தோல்வி

இந்தியா

ராஜஸ்தான் இடைத்தேர்தல் : பாஜக அமைச்சர் தோல்வி

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றது. பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, அம்மாநில முதல்-மந்திரியாக பஜன்லால் ஷர்மா பொறுப்பேற்றார்.

கரன்பூர் தொகுதி வேட்பாளர் குர்மீத் சிங் கூனரின் மறைவை அடுத்து கரன்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், 81.38 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பதிவான வாக்குகளில் ருபிந்தர் சிங் கூனருக்கு 94,950 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கிற்கு 83,667 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் 11,283 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் கூனர் தோற்கடித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற ருபிந்தர் சிங் கூனருக்கு முன்னாள் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top