Connect with us

Raj News Tamil

தக்காளி விற்றே கோடீஸ்வரரான விவசாயி!

Trending

தக்காளி விற்றே கோடீஸ்வரரான விவசாயி!

தக்காளி விற்று ஒரே மாதத்தில் 1 கோடியே 50 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டிய மராட்டிய மாநிலம் விவசாயி ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகின்றது. உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனையாகிறது. தலைநகர் டெல்லியில் ரூ.200-ஐத் தொட்டுவிட்டது.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் துகாராம் பஹொஜி கெய்கர். இவருக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 12 ஏக்கரில் துகாராம் தக்காளி பயிரிட்டுள்ளார். துகாராம் அவரது மகன் ஈஸ்வர் மருமகள் சோனாலி ஆகியோர் இணைந்து தங்கள் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளனர்.

போதிய அளவில் உரம் பயன்படுத்தி, பூச்சி, புழுக்கள் பாதிப்பில் இருந்து தக்காளிச்செடிகளை இவர்கள் வளர்த்து வந்த நிலையில் தற்போது தக்காளிச்செடிகள் நல்ல விளைச்சல் கொடுத்து வருகின்றன.

தற்போது தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் துகாராம் பஹொஜி கெய்கர் குடும்பத்திற்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் துகாராம் பஹொஜி கெய்கர் 13 ஆயிரம் தக்காளிப்பெட்டிகள் (கிரேட்ஸ்) விற்பனை செய்துள்ளார்.

ஒரு தக்காளி பெட்டி சராசரியாக 1,000 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 400 ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். 13 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனை செய்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக துகாராம் ஒரு மாதத்தில் 1 கோடியே 50 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

குறிப்பாக, நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு பெட்டி (கிரேட் – 20 கிலோ) தக்காளி 2 ஆயிரத்து 100 ரூபாய் விகிதத்தில் 900 தக்காளிப்பெட்டிகளை விற்பனை செய்து 18 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

More in Trending

To Top