Connect with us

Raj News Tamil

சாலையில் விழுந்த மரம்: உயிரை காப்பாற்றி ஹெல்மெட்!

தமிழகம்

சாலையில் விழுந்த மரம்: உயிரை காப்பாற்றி ஹெல்மெட்!

அசோக் நகரில் மரம் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு.

சென்னை அசோக் நகர் 3வது அவென்யூ 35 வது தெருவில் சாலையோரம் இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு நடுரோட்டில் சாய்ந்து விழுந்துள்ளது. அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மாம்பழம் பகுதியை சேர்ந்த செண்பகம்(46) என்பவர் மீது மரம் விழுந்துள்ளது.

அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் பெரும் காயம் தவிர்க்கப்பட்டு அவரது கழுத்து மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் சேதம் அடைந்துள்ளது.

அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் யாழினி நேரில் வந்து விபத்துக்குள்ளான பெண்மணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தா். பின்னர் மாநகராட்சி ஊழியர்களை வரவழைத்து விழுந்த மரத்தை அகற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

More in தமிழகம்

To Top