Connect with us

Raj News Tamil

150 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்..!

தமிழகம்

150 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்..!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி என்பவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீன் வியாபாரி ஒருவர் தன்னைத் தாக்கியதாக கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இன்று காலை குமரன் சாலை பகுதியில் அமைந்துள்ள 150 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அந்த பெண் கீழே இறங்கி வர மறுத்து அந்த மீன் வியாபாரியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top