சினிமா
அடுத்த பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் ராக்கி பாய்!
கே.ஜி.எப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவரது அடுத்த படத்தை எதிர்நோக்கி, பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், யாஷின் அடுத்த படம் தொடர்பான, பிரம்மாண்டமான அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, ராமாயணத்தை மையமாக கொண்டு, பாலிவுட்டில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்த படத்தில், ஆலியா பட், ரன்பீர் கபூர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது, இந்த படத்தில், நடிகர் யாஷ்-ம் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த ராக்கி பாயின் ரசிகர்கள், கடும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login