தமிழகம்
பரிதாபமாக உயிரிழந்த அதிமுக கவுன்சிலர்!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில், அதிமுக கவுன்சிலராக இருந்து வருபவர் ஜி.முருகன். இவருக்கு, பிரபாவதி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், இவர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்த காரின் ஓட்டுநரும், உடன் வந்திருந்தவர்களும், காரை அங்கேயே விட்டுவிட்டு, தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும், வாகனத்தின் உரிமையாளரையும், டிரைவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login