Connect with us

Raj News Tamil

புகை பிடிப்பதற்கு முயன்ற போது தீ பற்றி எரிந்து உயிரிழந்த முதியவர்!

தமிழகம்

புகை பிடிப்பதற்கு முயன்ற போது தீ பற்றி எரிந்து உயிரிழந்த முதியவர்!

தாம்பரம் அருகே புகை பிடிப்பதற்கு முயன்ற போது முதியவர் தீ பற்றி எரிந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் முதியவர் முனியன் (85) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (78) தனியாக வசித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டு சிக்கிச்சை பெற்று வந்த முதியவர் முனியன் நேற்று இரவு புகை பிடிப்பதற்காக நெருப்பை பற்ற வைத்த போது கைதவறி நெருப்புடன் படுக்கையில் விழுந்த தீக்குச்சியால் தீபாற்றி எரிய தொடங்கியது.

தீ பற்றி எரிவதை கண்டும் கால் முறிவு காரணமாக தப்பிக்க முடியாமல் திணறிய முதியவரின் இடுப்பு பகுதி முழுவதுமாக எரிய தொடங்கியது.

இதனையடுத்து முதியவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அனைத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதியவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உடலை கைப்பற்றிய சேலையூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top