தமிழகம்
ரயிலில் பயணம் – அசந்த நேரத்தில் 19 சவரன் நகையை திருடிய இளைஞர்..
Published on
ரயிலில் பயணம் செய்தவரிடம் இருந்து, 19 சவரன் நகை திருடிய இளைஞரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பெருங்குடியில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பையா சுரேஷ். இவர், கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி அன்று, ரயிலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவரது கையில் இருந்த லேப்-டாப்பையும், 19 சவரன் நகையையும், மர்ம நபர் ஒருவர் திருடிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ், காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ் என்பவர், நகையையும், லேப்-டாப்பையும் திருடியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Continue Reading
Click to comment
You must be logged in to post a comment Login