Connect with us

Raj News Tamil

கடன் தொல்லையால் மன உளைச்சல்…தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு..

தமிழகம்

கடன் தொல்லையால் மன உளைச்சல்…தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு..

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் (48). இவர் திருமுடிவாக்கத்தில் ஏ.கே ஆட்டோமொபலைஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்,இவருடைய மனைவி ஜான்சிராணி குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர். இந்நிலையில் ஆட்டோமொபல் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த பல நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் பணத்தை அளித்தவர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த இருவரும் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தனி தனியாக கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மகன் மற்றும் மகள் தூக்கில் தொங்கியபடி இருந்த பெற்றோரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த சிட்லப்பாக்கம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top