Connect with us

Raj News Tamil

ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி

அரசியல்

ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி

கடந்த 2019ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தின் கர்நாடகாவில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘மோடி’ பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்பளித்தது.

இதனை தொடர்ந்து, தனது 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த பி.ஆர். கவாய் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உச்சபட்ச தண்டனைக்கான எந்த காரணங்களும் இல்லாததால் தண்டனையை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

More in அரசியல்

To Top