Connect with us

Raj News Tamil

கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பு- 3 பேர் பலி

உலகம்

கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பு- 3 பேர் பலி

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலையில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென அங்கு குண்டு வெடித்தது. இதில் பலர் உடல் சிதறிய நிலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்காக அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement

More in உலகம்

To Top