Connect with us

Raj News Tamil

பற்றி எரிந்த ஆழ்துளை கிணறு!

Trending

பற்றி எரிந்த ஆழ்துளை கிணறு!

ஆந்திராவில் அம்பேத்கர் கோன சீமா மாவட்டத்தின் சிவகோடு கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது இது விவசாய பயன்பாட்டிற்காக இதில் இருந்து நேற்று தண்ணீர் எடுப்பதற்காக அதன் உரிமையாளர், மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது சில அடி வரை தண்ணீர் வந்தது; பின், 10 அடி உயரத்திற்கு தீ எரியத் துவங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன், பேரிடர் மேலாண்மை குழுவினரும் விரைந்து வந்தனர்.

ஒரு புறம் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்த நிலையில், மற்றொரு புறம் ஆழ்துளை கிணற்றில் இருந்து தீப்பற்றியது எப்படி என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பூமிக்கு அடியில் இருந்து இயற்கையாக வெளியேறிய எரிவாயுவால் தீப்பற்றியதாகவும் தெரிவித்தனர்.

More in Trending

To Top