Connect with us
Raj News Tamil

Raj News Tamil

மஹூவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு – விசாரணையை தொடங்கிய சிபிஐ

இந்தியா

மஹூவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு – விசாரணையை தொடங்கிய சிபிஐ

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருந்து வருபவர் மஹூவா மொயத்ரா.

இவர், நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள், பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்திற்கு எதிராக இருப்பதாகவும், இந்த கேள்விகளை கேட்பதற்காக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று, லோக்பால் அமைப்பிடம் புகாரும் அளிக்கப்பட்டது. இந்த புகாரைத் தொடர்ந்து, அந்த அமைப்பு, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சி.பி.ஐ அதிகாரிகள், முதற்கட்ட விசாரணையை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக, இந்த மாதம், நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் குழுவால், எம்.பி. மஹூவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் இருந்து தகுதநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top