தமிழகம்
சிபிஎஸ்இ ரிசல்ட் : மாநிலத்தில் முதலிடம் பெற்ற வேலூர் மாணவி..!
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் வேலூர் மாணவி மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வேலூர் காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் ரேவா என்ற மாணவி காட்பாடி பகுதியில் உள்ள சிருஷ்டி சிபிஎஸ்இ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் படித்தார்.
இந்நிலையில் இன்று வெளியான சிபிஎஸ்இ தேர்வு முடிவில் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி ரேவாவை பள்ளி தாளாளர், பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
You must be logged in to post a comment Login