Connect with us
Raj News Tamil

Raj News Tamil

விமானத்தில் இருமுடியுடன் பயணிக்கலாம்! – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியா

விமானத்தில் இருமுடியுடன் பயணிக்கலாம்! – மத்திய அரசு அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்ட நிலையில் ஐயப்பன் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. முதல் நாள் முதலே சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 16ஆம் தேதி முதல் தற்போது வரை சுமார் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 789 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் மத்தியஅரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் தேங்காயுடன் இருமுடி கொண்டு செல்லலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

More in இந்தியா

To Top