Connect with us

Raj News Tamil

கலக்கலாக 8 கல்யாணம் – கல்யாண ராணி ரசீதா!

Trending

கலக்கலாக 8 கல்யாணம் – கல்யாண ராணி ரசீதா!

சேலம் மாவட்டம், தொளசம்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கும், நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ரசீதா என்பவருக்கும், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறியதால், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூன்று மாத காலம் கூடி வாழ்ந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி ரசீதாவைக் காணவில்லை என அவருடைய கணவர் மூர்த்தி,தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக, புகாரில் கூறியிருந்தார்.

காவல்துறை விசாரணையில், ரசீதாவின் சமூக வலைதளங்களை ஆய்வு செய்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பணக்கார நபர்களை குறி வைத்துப் பழகி திருமணம் செய்து, கொஞ்ச காலம் ஆன பின்பு, இருப்பதை எல்லாம் சுருட்டி கொண்டு, கம்பி நீட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இதுவரை ரசீதா 8 திருமணம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.தொடரும் விசாரணையில் இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம் என, காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in Trending

To Top