Connect with us

Raj News Tamil

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

தமிழகம்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top