Connect with us

Raj News Tamil

சென்னை TO திருநெல்வேலி…விரைவில் வருகிறது வந்தே பாரத் ரயில்

தமிழகம்

சென்னை TO திருநெல்வேலி…விரைவில் வருகிறது வந்தே பாரத் ரயில்

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்த ரெயில் திருச்சி, மதுரை வழியாக 8 மணி நேரத்தில் திருநெல்வேலி செல்லும். மேலும் இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடையும். பின் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும்.

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயில் சேவையை ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More in தமிழகம்

To Top