Connect with us

Raj News Tamil

காதலரை மயக்க 5 கோடி செலவு செய்து சூனியம் வைத்த பெண்!

உலகம்

காதலரை மயக்க 5 கோடி செலவு செய்து சூனியம் வைத்த பெண்!

சீனாவில் உள்ள லியோனிஸ் என்ற பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் வாங். இவர், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் சரி செய்வதற்கும், தனது காதலனை மயக்குவதற்கும் முடிவு செய்த வாங், சூனியம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

இதற்காக, தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து, ரூபாய் 5 கோடியை திருடியுள்ளார். இந்த பணத்தை வைத்து மந்திரவாதிகளிடம் சென்று, சூனியமும் செய்துள்ளார்.

நீண்ட காலமாக இதையறியாத கடை முதலாளி ஒருகட்டத்தில் காவல் துறையில் புகார் அளித்த நிலையில் வாங் செய்த திருட்டு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதனால் வாங் கைது செய்யப்பட்டு உள்ளார்.

More in உலகம்

To Top