Connect with us

Raj News Tamil

குழந்தைக்கு டிக்கெட் எடுக்க சொன்ன ஊழியர்கள்.. குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்ற பெற்றோர்..

உலகம்

குழந்தைக்கு டிக்கெட் எடுக்க சொன்ன ஊழியர்கள்.. குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்ற பெற்றோர்..

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கணவன்-மனைவி, தங்களது குழந்தையுடன், இஸ்ரேல் நாட்டில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். தங்கள் இருவருக்கும் மட்டுமே டிக்கெட் எடுத்திருந்த அந்த தம்பதியினர், குழந்தை டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளனர்.

இதனை அறிந்த விமான நிலைய ஊழியர்கள், அந்த தம்பதியினரிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறினர். ஆனால், அதற்கு வாக்குவாதம் செய்த அவர்கள், டிக்கெட் எடுக்க முடியாது என்று ஒற்றைக் காலில் நின்றுள்ளனர்.

இறுதியில் விமானம் கிளம்புவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், தங்கள் குழந்தையை செக்-இன் கவுண்டரிலேயே விட்டுவிட்டு செக்யூரிட்டி செக் பகுதிக்கு அந்த தம்பதியர் சென்றனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள், தங்களது குழந்தையை எடுத்துக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். பின்னர், அந்த தம்பதியினர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top