Connect with us

Raj News Tamil

விரைவில் உயரப்போகும் மின்கட்டணம் – பொது மக்கள் அதிர்ச்சி

இந்தியா

விரைவில் உயரப்போகும் மின்கட்டணம் – பொது மக்கள் அதிர்ச்சி

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது முதலில் பயன்படுத்தும் 100 யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை ரூ.2.30 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5க்கு பதிலாக ரூ.5.45 பைசா வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் முதல் 100 யூனிட் வரை வசூலிக்கப்படும்.

ரூ.5.70க்கு பதிலாக 6 ரூபாயும், 101 முதல் 250 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.6.75க்கு பதிலாக ரூ.6.85 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

251 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்குரூ.7.50க்கு பதிலாக ரூ.7.60 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் தற்போது யூனிட்டுக்கு ஐந்து ரூபாய் 30 காசிலிருந்து, ஐந்து ரூபாய் 45 காசுகளாக உயர்த்தப்படுகிறது.

இது தொடர்பாக பொதுமக்களிடம் விரைவில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக் கணிப்பு நடத்தும். அதன் பிறகு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வரும் என இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top