Connect with us

Raj News Tamil

தொழிற்சாலையில் தீ விபத்து…சமூக விரோதிகளின் செயலா? போலீசார் விசாரணை

இந்தியா

தொழிற்சாலையில் தீ விபத்து…சமூக விரோதிகளின் செயலா? போலீசார் விசாரணை

புதுச்சேரியின் கரசூர் கிராமத்தில் உள்ள எல் & டி தொழிற்சாலை கடந்த 6 ஆண்டுளுக்கு முன்பு மூடப்பட்டது. அங்குள்ள கிடங்கில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை கிடங்கில் இருந்து புகை கிளம்பியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக சேதராப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

தீ கட்டுபடாத நிலையில் மேலும் 4 தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மூடி கிடந்த தொழிற்சாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக விரோதிகள் யாரேனும் தீ வைத்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

More in இந்தியா

To Top