Connect with us

Raj News Tamil

தனியார் சர்க்கரை ஆலையில் வாயு கசிவு. இரண்டு பேருக்கு வாந்தி, மயக்கம்

தமிழகம்

தனியார் சர்க்கரை ஆலையில் வாயு கசிவு. இரண்டு பேருக்கு வாந்தி, மயக்கம்

கரூர் மாவட்டம் புகலூர் பகுதியில் புகலூர் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150 மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையின் போது அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், விடுமுறை முடிந்த பிறகு இன்று அனைவரும் சர்க்கரை ஆலைக்கு வேலைக்கு வந்தனர். பல நாட்களாக கம்பெனி இயந்திரம் செயல்படாத இருந்த நிலையில் உள்ளே கரும்பு சக்கைகள், கரும்பு சார் இருந்துள்ளது.

அதிலிருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டதாகவும், இரண்டு நபர்களுக்கு வாந்தி, மயக்கம் அடைந்ததாகவும், அபாய சங்கு தொடர்ந்து மூன்று முறை ஒழித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு பேர் மயக்கம் அடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் நிர்வாகம் தரப்பில் கூறியுள்ளனர்.

இதனால் ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் ஒன்று கூடும்படி அதிகாரிகள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உரிய நேரத்தில் வாயு கசிவு சரி செய்யப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top