Connect with us

Raj News Tamil

தீபாவளியை முன்னிட்டு களைகட்டும் ஆட்டு சந்தை! – கோடிகளில் விற்பனை..!

தமிழகம்

தீபாவளியை முன்னிட்டு களைகட்டும் ஆட்டு சந்தை! – கோடிகளில் விற்பனை..!

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் இன்று ஆடு, மாடு, கோழி சந்தை நடைபெறுகிறது. சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் கூடியதால் குந்தாரப்பள்ளி சந்தை களைகட்டி உள்ளது.

காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் 7 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விழுப்புரம், செஞ்சியில் நடந்த ஆட்டுச் சந்தையில் 6 கோடி ரூபாய்க்கும் கடலூர், வேப்பூர் சந்தையில் 6 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 21 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in தமிழகம்

To Top