Trending
அரசு அலுவலகத்தில் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேலை பார்க்கும் ஊழியர்!
தெலங்கானா மாநிலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேலை செய்யும் வீடியோ சமூக வலைவளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தின் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளார். இதில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதனால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேலை பார்த்து வருகின்றன.
இந்நிலையில், இந்த கட்டிடம் வாடகையில் இயங்கி வருகிறது, சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால் கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, ஆனால் உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் அங்கு அலுவலகத்தை மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.