இந்தியா
டெஸ்ட் மேட்ச்சை பார்க்க சென்றபோது சாதனை படைத்த பிரதமர் மோடி!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான, 4-வது டெஸ்ட் போட்டி, நடந்து வருகிறது. இந்த போட்டியை காண்பதற்காக நேற்று பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பேனிஸ்-ம், கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை புரிந்தனர்.
இதனை அறிந்த மோடியின் ஆதரவாளர்களும், கிரிக்கெட் ரசிகர்களும், நாள் ஒன்றிற்கான டிக்கெட்டை போட்டி போட்டுக் கொண்டு, ஆன்லைனில் புக் செய்தனர். இவ்வாறு இருக்க, அன்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், அந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக மைதானத்திற்குள் வந்து, பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2013-ஆம் ஆண்டு, மெல்போர்ன் மைதானத்தில் நடந்த ஆஸஷ் டெஸ்ட் தொடரை காண்பதற்கு 91 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்திருந்தனர். அந்த சாதனையை, தற்போது இந்த சம்பவம் முறியடித்துள்ளது.
You must be logged in to post a comment Login