Connect with us

Raj News Tamil

கொடூர சம்பவம்: பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை!

இந்தியா

கொடூர சம்பவம்: பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை!

ஆந்திர மாநிலம் சேர்ந்த பூசிராஜு, நரசம்மா ஆகியோருக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் கடந்து உள்ளன. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பூசிராஜு கஞ்சா மற்றும் மது போதை பழக்கத்து அடிமையாகியிருந்தார். அவர் அடிகடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் நரசம்மா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வந்து தனது சகோதரருடன் வேலைக்கு சென்று வந்துள்ளார். தனது மூத்த மகள் மஞ்சுளாவை (13) பள்ளியில் விட்டு செல்வது வழக்கம். வேலை முடிந்து மாலையில் அழைத்து வருவார்.

இந்நிலையில் மகளை அழைக்க பள்ளிக்கு சென்ற போது, அவர் ஏற்கனவே அவரது தந்தையுடன் சென்றதாக பள்ளியில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே பூசிராஜு தன் மகளை பாறை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அதில் மோதி கொலை செய்தார்.

இதையடுத்து நரசம்மா, மகளின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பூசிராஜு மாதத்திற்கு ஒரு குழந்தையை கொன்று விடுவேன் என்று தெரிவித்தது, நிஜமாகவே இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீஸார் மகளை பூசிராஜூ அழைத்துச் சென்றதை உறுதி செய்தனர். இதையடுத்து தப்பிச் சென்ற அவரை கைது செய்தனர்.

More in இந்தியா

To Top