Connect with us
Raj News Tamil

Raj News Tamil

கணவன், மனைவி சண்டை – தடுக்க வந்த மைத்துனருக்கு கத்திக்குத்து..!!

தமிழகம்

கணவன், மனைவி சண்டை – தடுக்க வந்த மைத்துனருக்கு கத்திக்குத்து..!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்ஜி. இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். நேற்று இரவு கஞ்சா போதையில் இருந்த ராம்ஜி தனது மனைவி சுகுணாவிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனை தடுக்க வந்த ராம்ஜியின் மைத்துனர் துப்புரவாளர் பரணி, மாமியார் விஜயா மற்றும் மனைவியின் அக்கா கல்கி, மாமனார் பாண்டியன் என்ற நான்கு பேரையும் ராம்ஜி கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த மைத்துனர் பரணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட பரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தப்பி ஓடிய ராம்ஜியை 2 மணி நேரத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More in தமிழகம்

To Top