Connect with us

Raj News Tamil

கள்ளக்காதல் செய்த மனைவி.. கள்ளக்காதலனை கொன்றுவிட்டு ரத்தத்தை குடித்த கணவன்..

இந்தியா

கள்ளக்காதல் செய்த மனைவி.. கள்ளக்காதலனை கொன்றுவிட்டு ரத்தத்தை குடித்த கணவன்..

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள பட்லபள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜய். 35 வயதாகும் இவருக்கு, மாலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், மாலாவுக்கும், விஜயின் நண்பருக்கும் இடையே, கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விஜய், தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.

இருப்பினும் திருந்தாத இருவரும், அடிக்கடி சந்தித்து, தங்களது காதலை தொடர்ந்து வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஜய், தனது நண்பனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அந்த திட்டத்தின்படி, தனது நண்பனை ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு அழைத்து சென்று, மதுவை அருந்த வைத்தார்.

பின்னர், அவர் போதை நிலைக்கு சென்ற பிறகு, மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து, சரமாரியாக வெட்டினார். அப்போது, பீறியடித்த ரத்தத்தை தனது வாயை வைத்து குடிக்கவும் செய்தார்.

இதையடுத்து, அந்த இடத்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டார். பின்னர், அப்பகுதி வழியாக வந்த பொதுமக்கள், விஜயின் நண்பரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி, அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விஜயை கைது செய்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top