தமிழகம்
ஆளுநரை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக சட்டப்பேரவையின் மாண்பை சீர்குலைத்த தமிழக ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தபால் அலுவலகம் முன்பு, கரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட பொருளாளர் மெஞ்ஞான மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் , தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழகத்தின் மாண்பை கருத்தில் கொண்டு, தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நீட் மசோதாவுக்கு ஒப்புதல் மற்றும் ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெறு என்பது உட்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் வெங்கடேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment Login