Connect with us

Raj News Tamil

“நயன்தாரா என்னை வேண்டாம்-னு சொல்லிட்டாங்க” – பிரபல நடிகையால் பகீர்!

சினிமா

“நயன்தாரா என்னை வேண்டாம்-னு சொல்லிட்டாங்க” – பிரபல நடிகையால் பகீர்!

மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், முதன்முறையாக உருவான திரைப்படம் தடையறத் தாக்க. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை மம்தா மோகன் தாஸ். இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தன்னுடைய திரை அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், நடிகை நயன்தாராவால், ரஜினி படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு பறிபோனது என்று தெரிவித்தார். அதாவது, பி.வாசு இயக்கத்தில், பசுபதி, மீனா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் குசேலன். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடிகை நயன்தாரா மட்டுமின்றி, நடிகை மம்தா மோகன் தாஸையும் நடிக்க வைப்பதற்கு, படக்குழுவினர் முயற்சித்தார்களாம். ஆனால், நடிகை நயன்தாரா குறுக்கிட்டு, ஒரே ஒரு நடிகையே போதுமானதாக இருக்கும் என்று கூறினாராம். இதன்காரணமாக, அவருக்கு அந்த வாய்ப்பு பறிபோனதாக, பேட்டியில் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, அருந்ததி திரைப்படத்தில், அனுஷ்காவிற்கு பதிலாக நான் தான் அந்த படத்தில் நடிக்க இருந்தேன். ஆனால், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு பயமாக இருந்தது. ஆனால், அதன்பிறகு தான் ஒரு நல்ல படத்தை தவறவிட்டுவிட்டேன் என்பது தெரியவந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top